பெங்களூர் கலவரம்..மேலும் 35 பேர் கைது..!

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக  கடந்த 11-ம் தேதி 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது.

டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

வன்முறைக்கு அடுத்த நாள் 145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து வன்முறை தொடர்பாக இரண்டு நாள்களுக்கு முன் மேலும் 60 பேரை கைது செய்தனர். இந்நிலையில், தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை  300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
murugan