மெரினா கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை!

பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில், பொங்கல் தினத்தையொட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வார விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.