18 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் பாலா – சூர்யா..?

18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பிதாமகன் படத்தை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஜீலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.