மோசமான வானிலை…!பாதியிலேயே திரும்பிய முதலமைச்சர் பழனிச்சாமி…! நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து…!

முதலமைச்சர் பழனிச்சாமி நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார் .

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.

Leave a Comment