இன்றயை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (16 முறை) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதைப்போலவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், ரோகித் டக் அவுட் ஆன, நிலையில், தற்போதும் அவர் டக் அவுட் ஆகியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக சுனில் நரைன் (15), மந்தீப் சிங் (15),
தினேஷ் கார்த்திக் (15) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.