பாபர் மசூதி வழக்கு.. நீதிபதி முன்பு அத்வானி ஆஜராகி வாக்குமூலம்..

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை கடந்த 2001 ஆம் ஆண்டு அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது. இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தினமும்  லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக தலைவர் உமா பாரதி ஆகியோர் நேரில் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று காணொலி வாயிலாக நீதிபதி எஸ்.கே.யாதவ் முன் ஆஜர் ஆகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan