ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகு தான்.! பாபா ராமதேவ் சர்ச்சை பேச்சு.!

மஹாராஷ்டிராவில், ‘ பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என பாபா ராமதேவ் கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தானேயில் நடத்தப்பட்டது .

இதில் பதஞ்சலி தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமைவகித்தார். மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார்.

அப்போது பாபா ராமதேவ் யோகா பயிற்சிக்கு முன் பேசுகையில், ‘ பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என கூறினார்.

பாபா ராமதேவ், பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள். என கூறியது மஹாராஷ்டிராவில் மிகுந்த சர்ச்சையாகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment