சுவாமியே சரணம் ஐயப்பா..!கோஷத்துடன் திறக்கிறது அய்யனின் நடை இந்நாளில்.!

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும்  மகர விளக்கு பூஜையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் தேதியில் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும்
அவ்வாறு திறக்கப்பட்டு அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும்  வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதே போல கோவில் திருவிழா நாட்கள் மற்றும் பிரதிஷ்டை தினம்,விஷூ பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில் நடை திறக்கப்படும் சிறப்பு  பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடைபெறும்.
அதன் படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 15ம் தேதி சனிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

author avatar
kavitha