பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு!

பதஞ்சலியின் கொரோனில் எனும் ஆயுர்வேத மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிபர் பாபா ராம் தேவ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார மையத்தின் மருத்துவ கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபலமான பாரம்பரிய மருத்துவ நிறுவனமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ள பதஞ்சலி எனும் நிறுவனத்தின் சார்பில் கொரோனில் எனும் மருந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அந்நிறுவனத்தின் அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து இது கொரோனா மருந்துகளுடன் சேர்த்து கொடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கும் ஏற்றது என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மருந்து சற்றே மேம்படுத்தப்பட்டு கொரோனில் கிட் எனும் பெயருடன் டெல்லியில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் அந்நிறுவனத்தின் அதிபர், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூன்று முதல் ஏழு நாட்களில் 100% குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என பதஞ்சலி நிறுவனத்தின் அதிபர் பாபா ராம்தேவ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மத்திய மருந்து கட்டுப்பாட்டு பிரிவு, தங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்து பொருள் என்ற உறுதி மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், கொரோனாவை குணமாக்கும் என்பது தொடர்பாக தாங்கள் இந்த கொரோனில் மருந்துக்கு எந்த ஒரு சான்றிதழும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனில் மருந்தை தனியாக உட்கொண்டு வருவதால் கொரோனா முழுமையாக  குணமடையும் என்பதற்கான சான்றிதழையோ, ஒப்புதலையும் உலக சுகாதார மையம் அளிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது.

Rebekal

Recent Posts

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

1 hour ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

3 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

3 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

3 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

4 hours ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

4 hours ago