அயோத்தி வழக்கில் சமரச குழு மீது நம்பிக்கை இல்லை! இந்து அமைப்புகள் புகார்!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து சம்பத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை பிரித்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது.

இந்த வழக்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட இப்ராஹிம் லலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை அமைத்து அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த சமரச குழு மீது நம்பிக்கை இல்லை அந்த குழு மந்தமாக செயல்படுகிறது என இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,’ இந்த சமரச குழு ஆகஸ்ட் 15இல் இறுதி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இம்மாதம் 18ஆம் தேதி இடைக்கால அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும்.’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.