மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மனுவின் நகல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இம்மனுவை 02-08-2021 (திங்கட்கிழமை) அன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.
மேலும், 31-07-2021 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கிராம சபை விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் (Zoom Meeting) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள், விளக்கங்களை sscom@maiam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் உள்ளாட்சி வல்லுனர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று உங்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
குறிப்பு:
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு கீழ்க்கண்ட “கிராம சபை” பயிற்சி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…