கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மேம்படுத்துவதில் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். அதிலும், பெண்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தலை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ஆவாராம்பூ – 100 கிராம்
  • வெந்தயம் – 100 மிராம்
  • பயத்தம்பருப்பு – அரைகிலோ

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆவாரம்பூ, வெந்தயம் மற்றும் பயத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் கலந்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இந்த பவுடரை, குளிப்பதற்கு முன் வெந்நீரில் கரைத்து 10 நிடங்கள் ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வாரம் இருமுறை தலையை அலசி வர, முடி உதிர்வது நீங்கி, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.