ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சென்றடைந்தார் பிரதமர் – உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்…!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் கிட்டத்தட்ட 25 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஜெர்மன் நாட்டின் தலைநகராகிய பெர்லினை சென்றடைந்துள்ளார். அங்கு பிரதமரை சிறப்பாக வரவேற்றுள்ளனர். மேலும் … Read more

வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!

பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக … Read more

IPL 2022 : புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணியின் வீரர் உம்ரான் மாலிக்…!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். … Read more

ஆந்திர பிரதேசம் : கணவர் முன்பு கர்ப்பிணி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் ..!

ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது. அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் … Read more

பாலியல் புகார் விவகாரம் – மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திலிருந்து விஜய் பாபு விலகல்..!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் தெற்கு போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் … Read more

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து கொண்டே வருகிறது – ஆம் ஆத்மியை குறிவைக்கும் காங்கிரஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். … Read more

லஞ்சம் கேட்கும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒப்பந்ததாரர்…!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி சந்தோஷ் பாட்டீல் எனும் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ராஜினாமா செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. … Read more

இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கும் அனுமதிக்க ஒப்புக்கொண்ட சீனா …!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து … Read more

மத்திய பிரதேசம் : 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி..!

மத்திய பிரதேச மாநிலத்தில் இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குத்ருகாட் எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய மாணவி ரஜினி லில்ஹரே என்பவர் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தொலைபேசியில் அவர் கிணற்றில் குதிக்கும் சத்தம் கேட்டதும் … Read more

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

 54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார். ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது … Read more