இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் தான் ஜோ ரூட். இவர் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 வயதான ரூட் இவர் இதுவரை 27 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி … Read more

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை … Read more

சந்தேகத்தால் காதலியை கொன்ற 25 வயது இளைஞன் …!

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 25 வயது இளைஞன் 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அப்பொழுது வேறொரு ஆணிடமிருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞன் தனது காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி, அவர்களுக்குள் பிரச்சனை வளர்ந்ததால் அந்த இடத்தில் … Read more

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே…!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார். அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், … Read more

ஐஸ்வார்யாவே குழந்தைகளின் படிப்பை பார்த்துக்கொள்வார்; எனவே நான் அந்த பக்கம் செல்ல மாட்டேன் – அபிஷேக் பச்சன்

உங்கள் மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுவீர்களா என இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், எனது மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யாவே பார்த்துக்கொள்வார். மேலும் என் மகளுக்கு உலகின் சிறந்த ஒரு ஆசிரியை ஐஸ்வர்யா தான். மேலும் கணிதத்தில் ஐஸ்வர்யா மிகவும் சிறந்தவர். எனவே நான் அந்தப் பக்கம் போக மாட்டேன். அவரே எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.

13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து சிறுமியிடம் கத்தரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் தனது மகளை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களை கொலை … Read more

இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீப்பிடித்த பயணியின் மொபைல் …!

திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன..? அதன் சிறப்புகள் அறியலாம் வாருங்கள்..!

புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய  வெள்ளி என்று கிறிஸ்தவர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்த புனித வெள்ளியை தொடர்ந்து, மூன்றாம் நாள் இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த … Read more

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் ஜோடிகள்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரஷித்புரா எனும் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி வழியே சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் யார் என இன்னும் சரியாக அடையாளம் கண்டு பிடிக்கப் படவில்லை எனவும் … Read more