கணவரை கொல்வது எப்படி எனும் புத்தகத்தை எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது…!

கணவரை கொல்வது எப்படி எனும் புத்தகத்தை எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது…!

அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நான்சி கிராம்ப்டன்-ப்ரோபி எனும் பெண்மணி ஒரு காலத்தில் சிறந்த காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் ஒரு கட்டத்தில் உங்கள் கணவரை எப்படி கொல்வது எனும் கட்டுரை ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவரை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது சக பணியாளர் ஒருவர் அவரது கணவரின் உடலை சமையலறையில் கண்டதாக கூறியுள்ளார். அவரது மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூடு பட்ட காயமும் இருந்துள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் கொலை நடந்த போது தன் வீட்டில் என கிராம்ப்டன் கூறியுள்ளார். ஆனால், குற்றம் நடந்த இடத்தில் தான் அந்த நேரம் கிராம்ப்டன் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube