சதத்தை தவற விட்ட பண்ட்; முதல் நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் எடுத்த இந்தியா..!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் 6 பவுண்டரி உட்பட 29  ரன்கள் எடுத்தார். பின்னர் ஹனுமா விஹாரி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை..!

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING: மீண்டும் ஜாமீன் கோரி ஜெயக்குமார் மனு தாக்கல்..!

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை … Read more

#BREAKING: பாகிஸ்தானில் கோர சம்பவம்: வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலி ..!

பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் 50 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெஷாவர் மசூதியில் இன்று தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புக் குழுவினருடன் அருகில் இருந்தவர்களும் காயமடைந்தவர்களுக்கு உதவினர். காயமடைந்த 50 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது போலீசாரும், … Read more

பாஜகவிற்கு வாக்களித்த திமுக கூட்டணி கவுன்சிலர்கள்..!

இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளனர். அதில் திமுக 24, காங்கிரஸ் 7 , மதிமுக 1 என மொத்தமாக 32 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளனர். அதேநேரத்தில் பாஜக 11, அதிமுக 7 , சுயேச்சை 2 என பாஜக பக்கம் 20 கவுன்சிலர்கள் உள்ளனர். இன்று … Read more

இந்தந்த இடங்களில் கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற்ற திமுக..!

நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி, தருமபுரி: விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் … Read more

#BREAKING: உத்தரவை மீறிய திமுகவினர்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கீடு செய்தது. கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், தேனி அல்லிநகரம், கருமத்தம்பட்டி மற்றும் விசிக-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிகுப்பம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு … Read more

குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் வெற்றி..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அதில், திமுக, காங்கிரஸ் சார்பில் தலா 2 பேர், பாஜக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சைகள் சமீபத்தில்  திமுகவில்  இணைந்தனர்.  திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக  சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று திமுகவில் இணைந்த கமலா நேரு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுகசார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி … Read more

நகராட்சி தலைவர் தேர்தலில் விசிக தோல்வி; திமுக வேட்பாளர் வெற்றி..!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். கூட்டணி கட்சிகளுக்கு மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை நேற்று திமுக ஒதுக்கீடு செய்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி … Read more

வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலி..!

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 11.45 மணியளவில்  பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் இரண்டு மாடி வீடு இடிந்த நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் … Read more