வெயில் காலம் தொடங்கியாச்சு…! கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க…!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? வெயில் காலம் தொடங்கி விட்டாலே, நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், வெயில் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் – 2 இஞ்சி – சிறுதுண்டு சீனி – சிறிதளவு உப்பு – சிறிதளவு எலுமிச்சை – கால் பாதி செய்முறை … Read more

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை…!

அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. தமிழக அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில்,  வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் வரத்து சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஒட்டு … Read more

தேர்தல் பறக்கும் படையினர் காரில் நேருக்கு நேர் மோதிய லாரி…! பெண் காவலர் பலி….!

வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்  அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பெண் காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர்  … Read more

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 478 பேர் பலி…!

கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 478 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா … Read more

பணப்பட்டுவாடாவை தடுத்த பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…!

சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவருக்கு அரிவாள் வெட்டு. தேர்தல் சமயங்களில் பணப்பாட்டுவாடா செய்வது என்பது  சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சில இடங்களில் மறைமுகமான முறையில் பணப்பட்டுவாடா நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில், சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவரை, 3 பேர் கொண்ட மர்மக்கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி … Read more

ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்த போவதாக LG நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!

ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.  இன்று பல நிறுவனங்கள், பலராலும் உபயோகபடுத்தப்படக் கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் LG நிறுவனமும், ஸ்மார்ட் போன்களை தயாரித்து வந்தது. இதனையடுத்து, தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்தை காரணமாக ஜூலை 31-ம் தேதியுடன், தயாரிப்பை நிறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன  தயாரிப்பில் … Read more

சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ராகுல்காந்தி செய்த அசத்தலான செயல்…!

ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் என கூற, பிரியங்கா காந்திக்கு வீடியோ கால் செய்து கொடுத்த ராகுல்காந்தி.  கேரளாவில் தனது தொகுதியான வயநாட்டில் உள்ள, ஜீவன்ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, ஈஸ்டர் தினத்தை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அந்த இல்லத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்த குழந்தைகளுடன் இணைந்து உணவருந்தினார். இந்நிலையில், அங்கிருந்த ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் … Read more

அய்யயோ…! 50 மணிநேரம் இந்த பெட்டிக்குள் இருந்தாரா….? யூடியூபில் சாதனை படைத்த 22 வயது இளைஞன்…!

50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த 22 வயது இளைஞன்.  அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் என்பவர், சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அனுபவத்தை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் பலராலும், மிஸ்டர் பீஸ்ட் என்று பரவலாக அறியப்படுகிறார். இந்த நிலையில் இதற்காக முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் கேமராவின் உதவியுடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் இந்த … Read more

‘ஸ்டாலின் முதல்வராக வேண்டும்’ – 30,000 யூனிட் இரத்த தானம் செய்த 100 இளைஞர்கள்…!

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என இரத்ததானம் செய்த இளைஞர்.  திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த, வி.வி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என்றும் 30,000 யூனிட் இரத்தத்தை இரத்ததானம்  செய்தனர். தனியார் பொறியியல்  கல்லூரியில் நடைபெற்ற இந்த இரத்ததான … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி…! துணிச்சலான முடிவெடுத்த ஆட்சியர்…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியை, தனது சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர்.  தமிழக சட்டமன்ற பணிகளை பார்வையிடுவதற்காக, மதுரையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி பணியில்  ஈடுபட்டிருந்தார். இவர் காவல்துறையினரின் பணிகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து வந்தார். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்ட அவர், தனது கொரோனா அறிகுறி  இருப்பது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அவர் … Read more