தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அவருடன் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் ஆகிய அதிமுக நிர்வாகிகளும் … Read more

டிச.1 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – அமைச்சர் துரைமுருகன்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி காலை 10.30மணிக்கு முதல்வர் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர், இளைஞரணி வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் – டிடிவி

டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என டிடிவி பேட்டி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி அவர்கள் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்; ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக மக்களின் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் … Read more

பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி…! யாரையும் விடப்போவதில்லை – அண்ணாமலை பேட்டி

தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி என அண்ணாமலை பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை; தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற … Read more

பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாடி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து மாணவியருடன் விளையாடினார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சிடி தோட்டம் முதல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்தார். விளையாட்டு திடலை திறந்து வைத்த முதல்வர் அங்கு இருந்த மாணவியருடன் பூப்பந்து விளையாடினார்.

10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை..!

பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பலர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். அந்த வகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை புரிந்துள்ளனர்.  இலங்கையில் இருந்து அகதிகளாக … Read more

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை கேக்குகள்..!

ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை அறிமுகம் செய்கிறது.  ஆவின் நிர்வாகம் பண்டிகை நாட்களில் புதியவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய வகை சுவீட்டை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.  மேலும், … Read more

தமிழகத்தில் 40 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு..!

தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அருணாச்சலம் இன்பெக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்திலும், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனி, இன்டர்கிரேட்டட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்..!

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.  இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம்  நிலையில், இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தேர்தல் மற்றும் தெலுங்கு திரையுலகில் வாசு படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் போன்ற விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது.

இன்று ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…!

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மதியம் 12:45 மணியளவில் தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் திமுக அமைச்சரும் மீதான ஊழல் குறித்து ஆளுநரிடம் பேச உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் … Read more