#Breaking:காமராஜர் பல்.கழக பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு – அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா … Read more

#Justnow:சசிகலாவுக்கு அமைச்சர் பதவி;கைகோர்த்த திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம்!

சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில்,நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே,அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.மேலும்,இது தொடர்பாக பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன்,அண்ணா திராவிடர் கழகத்தை அக்கட்சி நிறுவனர் திவாகரன் இணைக்க … Read more

#Breaking:”என்னை கேட்காமல் இதனை யாரிடமும் ஒப்படைக்க கூடாது” – வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அதிமுக பொருளாளராக தான் இருப்பதால்,தன்னை கேட்காமல் எந்தவொரு வரவு-செலவு … Read more

#Breaking:”இனி காசோலைகளில் இவரே கையெழுத்து போடுவார்” – வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்ற நிலையில்,கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில்,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது … Read more

#Flash:ரேசன் கடை ஊழியர்களே…சிறப்பு ஊதிய உயர்வு;ஜூலை 14-க்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கை – கூட்டுறவுத்துறை உத்தரவு!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, … Read more

#Breaking:சற்று முன்…விசிக பிரமுகர் வீடு உட்பட 50 இடங்களில் ரெய்டு!

திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை … Read more

#Breaking:அதிமுக அலுவலகத்திற்கு சீல் – நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு அவசர முறையீடு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில்,அதிமுக … Read more

#Breaking:அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் – ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் … Read more

#Breaking:ராஜினாமா கடிதம் – கையெழுத்திட்டார் கோட்டபாய ராஜபக்சே?..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு … Read more

#Flash:முதல் முறையாக பிரபஞ்சத்தின் ரகசியத்தை புகைப்படம் எடுத்த நாசா – அதிபர் ஜோ பைடன் வெளியீடு!

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் ஆழமான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 … Read more