#Breaking:சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக – அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில்,ஆகஸ்ட் 2-வது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு என தெரிவித்தது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி … Read more

#Breaking:சற்று முன்…அவசரநிலை பிரகடனம் அமல் – பிரதமர் உத்தரவு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக  இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே … Read more

#Breaking:பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் – தமிழக அரசு!

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு முன்னதாக,2021-இல் இதே காலகட்டத்தில் ரூ.2577.43 கோடி கிடைத்த நிலையில்,தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Justnow:”இதனை கேட்டு வருத்தமடைந்தேன்” – ஆளுநர் ஆர்என் ரவி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.இந்த வேளையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.மேலும்,”அனைவரும், பாதுகாப்பாக இருங்கள்,தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.நான் தனிமைப்படுத்திகொண்டேன்” என பதிவிட்டார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும்,அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர். இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருதமடைந்ததாகவும்,அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தமிழக … Read more

#Breaking:நாடு முழுவதும் உள்ள பல்.கழகங்கள்,கல்லூரிகளுக்கு – யுஜிசி அதிரடி!

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் … Read more

#Wow:பிரபஞ்சத்தின் வியக்க வைக்கும் மேலும் சில புகைப்படங்கள் – நாசா வெளியீடு!

விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நாசா தனது ஜேம்ஸ் வெப் என்ற புதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுத்த … Read more

#Breaking:தொழில்முனைவோருக்கு கொரோனா உதவி;ரூ.50 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும்,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரையுள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் … Read more

#Justnow:அதிகாலை 3 மணி;விமானப்படையின் விமானம் – இலங்கையை விட்டு தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றினர். இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் … Read more

#Breaking:கனமழை எதிரொலி:பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நீலகிரியில் உதகை,பந்தலூர்,கூடலூர்,குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

#Flash:ஓபிஎஸ்-இபிஎஸ் அவசர முறையீடு – உயர்நீதிமன்றம் விசாரணை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். … Read more