சுஷாந்த் சிங் வழக்கில் பீகார் விசாரணை அதிகாரிகளை தனிமைப்படுத்துவது தவறானது -பாஜக எம்பி !

பிரபல நடிகர் சுஷாந் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ANI பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் வழக்கில் தொடர்புடைய  பீகார் அதிகாரிகளை தனிமைபடுத்தி இருப்பது தவறானது என்றும் மேலும் இவ்வாறு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக … Read more

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து உபகரணங்கள் வாங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க!

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் கஷ்டமான சூழ்நிலையிகளில் ஒருவொருக்கொருவர் உதவி செய்த்துள்ளன. … Read more

ஏப்ரல் மாத ஊதியத்தில் 75% குறைப்பு -தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ-  கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம்  குறைக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளது .

மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மதுபானம் வழங்கலாம்-கேரள முதல்வர் !

இந்தியா முழுவதும் 21 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்துதல் என்பதை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநிலத்திலும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கேரளா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 பேர்  தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மதுபானம் வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் .

25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்த மாணவர்கள்- உள்ளே அனுமதிக்காத கடை ஊழியர்கள் !

நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி  கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம் 

“என்னிடம் இருந்து விலகி இருங்கள்”- சாலையில் சுற்றியவரின் நெற்றியில் எழுதிய பெண் காவலர் !

நாடு முழுவதும் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சாலையில் சுற்றி திரிந்தவர் நெற்றியில் “நான் வீட்டில் தனிமைப்படுத்துதலை மீறிவிட்டேன், என்னிடமிருந்து விலகி இருங்கள்” என்று பெண்காவலர் ஒருவர் எழுதியுள்ளார். சட்டப்படி அந்த பெண் காவலர் செய்தது தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

“வீட்டில் தனிமைப்படுத்துதல்”- வேதனை தெரிவித்த பிரதமர் மோடி !

வீட்டில் தனிமைபடுத்துதல் பற்றி கூறுபவர்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும். சிலர் அறிகுறிகள் இல்லாமலே தங்களை தாங்கள் தனிமைபடுத்தியுள்ளனர் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

73 லட்சத்திற்கு பொருள் உதவி செய்த இன்போசிஸ் அறக்கட்டளை !

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  

இதோ இயற்கையான மாதுளை "FACE PACK" ட்ரை பண்ணி பாருங்க !

பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். மாதம் ஒருமுறை அல்லது வாரம்  ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது  முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால்  முகத்தில் பல பிரச்சனைகள்  ஏற்படும். எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள்  உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் … Read more

Election Breaking: திருவாரூர் ,திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர்,திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக வேட்பாளர் கலைவாணன் அதிமுக வேட்பாளரை விட  63,122 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.திருப்போரூர் திமுக வேட்பாளர் இதய வர்மன் அதிமுக வேட்பாளரை விட 20,377வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி  பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக 1,15,223 அதிமுக 52,101 வித்தியாசம் 63,122   திருப்போரூர் திமுக 1,02,410 அதிமுக 2,033 வித்தியாசம் 0,377