#AusvsInd: நிதானமான ஆட்டத்தால் அரை சதத்தை அடித்த விராட்.! ஆனால் அவுட்.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை அரை சத்தத்தை அடித்து ரன் அவுட் ஆனார் கோலி.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா 0, மாயங்க் அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் சேடேஷ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, புஜாரா 43 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

இதையடுத்து, கோலியுடன் ஜோடி சேர்ந்த அஜின்கியா ரஹானே தனது அனுபவம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். மறுபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் கோலி 74 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அஜின்கியா ரஹானே 41 ரன்கள் எடுத்துகளத்தில் உள்ளார். தற்போது ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்