#AusvsInd: இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரனா பிரித்வி ஷாவை தொடர்ந்து மாயங்க் அகர்வாலும் 17 ரன்களில் அவுட் ஆனார். 

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரித்வி ஷா 2 பந்துகள் விளையாடி ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து, சேடேஷ்வர் புஜாரா, மாயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் கம்மிங்ஸ் பந்தில் மாயங்க் அகர்வா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போல்ட் ஆனார். தற்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. சேடேஷ்வர் புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்