ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 …! மழையால் 17 ஓவர்களாக மாற்றம் …!

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.

 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் அடித்தது.களத்தில் மேக்ஸ்வேல் 46*, ஸ்டோய்னிஸ் 31* ரன்களுடன் இருந்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 2, கலீல் அகமது 1 விக்கெட் எடுத்துள்ளனர்.ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Comment