வருகின்ற ஆகஸ்ட் 29 வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

வருகின்ற 29 ஆம்  தேதி நாகை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய கிறிஸ்தவர்களின் ஆலயம் தான் வேளாங்கண்ணி மாதா பேராலயம். இங்கு வருடந்தோறும் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த வருடம் கோவில் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 7 ஆம் தேதி தேர் விழாவும், செப்டம்பர் 8 கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
Rebekal