வரதா…வரதா -அத்தி வரதா.! 40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்த அத்திவரதர்..!தரிசிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு  காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் பக்தர்களின் வரதா…வரதா…வரம் நீ தா…உன் அருளை அள்ளி தா அத்தி வரதா என்று கோஷங்களுக்கு மத்தியில் அருள வெளியே வந்தார்.

அத்தி வரரை காண மக்கள் அலைகடல் என்று  காஞ்சிபுரம் நோக்கி படை எடுக்கின்றனர் இந்நிலையில் அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில் அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை  கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று  அறிவித்துள்ளது.

author avatar
kavitha