மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை பொதுவிடுமுறையா? – தமிழ்நாடு அரசு

நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நாளையும்  விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், நாளை விடுமுறை என்ற வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து, நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment