எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளங்கள் அனைத்தும், பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளது இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து டிஜிட்டல் சேவைகள் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படும். இந்த தகவலை எஸ்பிஐ வங்கி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7-ஆம் தேதி 22:15 முதல் 8-ம் தேதி 1:45 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று மாலை முதல் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகிய அனைத்தும் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியை பொருத்தவரை சுமார் 85 மில்லியன் இன்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்களும், 19 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும், 135 மில்லியன் யுபிஐ சேவை பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கடந்த மாதமும், எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கியல் சேவை தளமான யூனோ, யூனோ லைட், இன்டர்நெட் வங்கி சேவை இவை அனைத்தும் பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…