வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்..!

நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்களை சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட்  வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராஹிம் சாலை மின்ட்  சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக செல்லலாம். அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, ராயர்பாலம், டவுட்டன் வழியாக செல்லலாம்.

சவுத்கெனல் ரோட்டிலிருந்து காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு சென்னை  பெருநகர் போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

author avatar
murugan