அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஜனநாயக முறையில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் சதி செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் அதிமுக தேர்தலில் போட்டியிடலாம், யாரும் தடுக்க முடியாது என கூறினார். அதிமுக அலுவலகத்துக்கு வெளியே நேற்று முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan