உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது – திருமாவளவன்

உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது – திருமாவளவன்

உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது என விசிக தலைவர் ட்வீட்.

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கமலஹாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவ் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார், போராட்டத்தில் ஈடுபடா விவசாயிகள் தமீது மோதச் செயததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்குப் பொறுப்பேற்று யோகி ராஜினாமா செய்யவேண்டும்.’  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube