கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

கன்னி ராசிக்காரர்களே !
இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். புதியதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்குப் பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றன்றைக்கே  படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை | எண்கள்: 5, 9
பரிகாரம்: பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.
source: dinasuvadu.com

Leave a Comment