தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர்…!

தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர்.

இன்று தாயானாலும், மனைவியானாலும் ஒரு ஆண் அவர்களிடம் நீண்ட நாட்கள் பாசத்துடன் இருப்பது ஆச்சர்யம் தான். இவர்களுக்கு மத்தியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தாய் மற்றும் மனைவிக்கு கோவில் காட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார்.

இவரது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோருக்கு வீட்டின் முன்பு சிலை அமைத்துள்ள நிலையில, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மனைவி மீனாட்சியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.