சட்டமன்றக் கூட்டம்… சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலட் சந்திப்பு..?

ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில், சச்சின் பைலட்டை முதல்வர் அசோக் கெஹ்லோட் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் சட்டமன்றம் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் அசோக் கெஹ்லோட் எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார்.

ஜெய்ப்பூருக்கு சச்சின் பைலட் திரும்பிய பின்னர் மூன்று நாள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் இடையில் எந்தவிதமான சந்திப்பு இல்லை. இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தின் போது சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெஹ்லோட்  இருவருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

author avatar
murugan