அசாம் கனமழை.! இதுவரை 107 பேர் உயிரிழந்தனர்.! 90 விலங்குகள் பலி.!

அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதி மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 26 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதுவரை 27.64 லட்சம் பேர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுக்காப்பாக இடத்திற்கு நகர்ந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க 649 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர். காசிரங்கா பூங்காவில் 90 விலங்குகள் பலியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.