வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டா கத்திய காட்டி மிரட்றாங்க மை லார்ட்!!

கும்பகோணத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டால், கத்தியை காட்டி மிரட்டி, ஒற்றை கையில் குவாட்டர், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர்.

கும்பகோணம்-தஞ்சாவூர் செல்லும் சாலைக்கு அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வந்த இரண்டு நபர், சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை வாங்கினார்கள்.

வாங்கியவுடன், அங்கிருந்து கிளம்பினார்கள். அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், வாங்கிய மதுபானங்களுக்கு பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள், அதில் ஒருவர், அவரின் பையில் இருந்த பட்டாகத்தியை எடுத்து அவர்களை மிரட்டி அங்கிருந்து கிளம்பி, கெத்தாக ஒரு கையில் குவாட்டரும், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர்.

இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி யில் பதிவானது. மேலும், அந்த நபர்கள் செய்த செயல்கள், அங்குள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.