ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.
டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை பயிற்சியாளர் ஆனார்.
குத்துச்சண்டையில் இவரது பங்களிப்பு காரணமாக நாட்டின் சிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கினர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. கொரோனாவிலிருந்து குணமடைந்த இவர் கல்லீரல் புற்றுநோய் காரணத்தால், இன்று காலை மணிப்பூரிலுள்ள செக்தா கிராமத்தில் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய வயது 42.
இவரது மறைவால் விளையாட்டுத்துறையில் உள்ள பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தந்து, மேரி கோம், விஜேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டின் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் டிங்கோ சிங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், டிங்கோ சிங் விளையாட்டில் சூப்பர் ஸ்டார். இவர் குத்துசண்டை விளையாட்டில் சிறந்த வீரராகவும், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தவும் பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். இவரது மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. இவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…