ஆசிய மல்யுத்தம் : இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார்.

இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர், கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில்  தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினாலும் விடாமுயற்சியுடன் போராடி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
author avatar
Dinasuvadu desk

Leave a Comment