மும்பை: மகாராஷ்டிரா 8 பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரம நிறுவனர் மற்றும் அவருக்கு உதவி செய்த பள்ளி உதவியாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா சங்கிலி மாவட்டத்தில் ஆசிரம பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல ஏழை மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் நிறுவனர் பல பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்துவந்துள்ளார். அப்பள்ளியில் பணிபுரிந்த உதவியாளரும் இவரது செயலுக்கு உதவியுள்ளார். இதனால் நிறுவனர் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இவர் அதே பள்ளியில் படிக்கும் மேலும் 5 மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ நிறுவனரை மற்றும் பள்ளி உதவியாளரை கைது செய்தனர்.
DINASUVADU