நிதின் கட்கரி சரியான மனிதன் தவறான கட்சியில் உள்ளார் – மகாராஷ்டிரா அமைச்சர் புகழாரம்..!

நிதின் கட்கரி சரியான மனிதன் தவறான கட்சியில் உள்ளார் – மகாராஷ்டிரா அமைச்சர் புகழாரம்..!

நிதின் கட்கரி நல்ல மனிதன் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் என மஹாராஷ்ட்ரா அமைச்சர் அசோக் சவான் புகழாரம்….

மும்பையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தவறான கட்சியில் சரியான மனிதர் என்று புகழ்ந்தார்.

அதாவது வீடியோ கான்பரன்சிங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அசோக் சவான் உரையாடும்போது “நான் அடிக்கடி நிதின் கட்கரி பற்றி பேசுகிறேன், நேற்றுமுன்தினம் கட்கரியைப் புகழ்ந்தேன், அவர் திறமையான அமைச்சர்.

மேலும் மகாராஷ்டிராவில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன, இதுதொடர்பாக கட்கரி தீவிரமாக செயல்படுகிறார். அவர் பணியாற்றும் முறையை கட்டுரைகள் எழுதுவதன் மூலமோ அல்லது ட்வீட் மூலமாகவோ நான் பகிரங்கமாக பாராட்டுகிறேன்.

ஆனால் அவரைப் புகழ்வது நான் அவரை அரசியல் ரீதியாக ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல, மொத்தத்தில், அவர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். எனவே நான் சொல்வது எல்லாம் அவர் சரியான மனிதர் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் ” என்பதுதான்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏழு ஆண்டுகள் பதவியில் நிறைவடைந்ததைக் கொண்டாடியபோது அசோக் சவான்  நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோயைக் கையாளத் தவறியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Join our channel google news Youtube