விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi பயன்படுத்த அனுமதி .! அதற்கான வரைவு விதிமுறைகள் இதோ.!

விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது.

விமானங்களில் பயணம் செய்பவர்கள்  WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது  WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது  அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை  குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமானியிடம்  பெற வேண்டும் .மேலும் விமானங்கள் மூவாயிரம் அடி உயரத்துக்கு பறந்த பின்னர் தான் பயணிகள் WiFi-யை பயன்படுத்த முடியும்.

விமானம் மூவாயிரம் அடி உயரத்திற்கு பறந்த பின்னர் பிளைட் மோடில் மட்டுமே செல்போன்கள், லேப்டாப் , ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரைவு விதிமுறைகளை குறித்த குற்றச்சாட்டுகளையும், கருத்துகளையும் முப்பது நாட்களுக்குள் அனுப்பும்படியும் கேட்டு கொண்டுள்ளனர்.