பிரபல தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அதிரடி கைது!

பிரபல தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள பிரபல தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டில் முதியவர் தற்கொலை செய்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை கைது செய்தனர். போலீசார், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வலுக்கட்டாயமாக தன்னை இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகாரளித்துள்ளார்.