துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை துருக்கி நாட்டில் பிட்லிஸ் மாகாணத்தில் துருக்கி படைப்பிரிவை சேர்ந்த குழுவினர்கள் தங்கள் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சிக்காக சென்றுள்ளனர் .இவர்கள் குர்திஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க போராடுபவர்களை எதிர்கொள்ளும் ராணுவ படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சிக்கு சென்ற அந்த ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட பல ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் ஹெலிகாப்டர் பிட்லிஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுபாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் ,அதன் பின் நடத்திய தேடுதல் வேட்டையில் பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள பனிமலை பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் எர்பாஸ் உட்பட 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ,4 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன் பின் வியாழக்கிழமை பிற்பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துருக்கி ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதே போன்று ஐரோப்பிய தூதரகமும், அமெரிக்க தூதரகமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.மேலும் இந்த விபத்தானது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மூடு பனி காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும்,அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…