சென்னையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரியமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரியமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் என்ற காவலர் ஆயுதபாடையில் பணியாற்றி வருகிறார். பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் இவர் தங்கியுள்ளார்.
இந்த இவர் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காவலர் சுரேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், சுரேஷ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.