அட யாரு இது.. எங்கையோ பாத்தமாதிரி இருக்கு? 10 வருடத்திற்கு பின் வைரலாகும் புகைப்படம்!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை அர்ஜுன் டெண்டுல்கர், பிருத்வி ஷா மைதானத்தில் பார்த்து ரசித்த புகைப்படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்து தற்பொழுது 10 ஆண்டுகள் கடந்தது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, இந்த 2011 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியை மைதானத்தில் பார்த்தனர். அவர்கள் குழந்தை பருவத்தில் இருந்த அந்த புகைப்படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இவர்கள், 2023 அல்லது 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இருக்க முடியும்” என்று கமெண்டு செய்து வருகின்றனர்.