திரெட்டிங் செய்யும் பெண்களா நீங்கள்? உங்களுக்கு தெரியாத சில உண்மைகள் அறியலாம் வாருங்கள்!

பெண்கள் விழாக்காலங்களில் எப்படி புது துணிகள் எடுப்பதற்கும், ஆடம்பரமான பொருட்களை வாங்குவதற்கும் ஆசைப்படுகிறார்களோ, அதேபோல விழா காலம் என்றாலே புருவங்களில் உள்ள முடிகளை திருத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம். இமையில் நூல்களை வைத்து ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் முடிகள் அந்நேரத்தில் மட்டும் வலியை கொடுக்கக்கூடியது பின்பு நமக்கு அழகைத்தான் கொடுக்கும் என பெண்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, அந்நேரத்தில் கொடுக்கக்கூடிய வலியைவிட காலப்போக்கில் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும். அவற்றை குறித்து நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஏன் திரெட்டிங் செய்ய கூடாது?

நமதுபுருவ முடிகள் வளர கூடிய இடங்கள் பிராணன் இயங்கும் இடங்கள் என கூறப்படுகிறது. நாம் அழகாகிறோம் எனும் பெயரில் அடிக்கடி திரெட்டிங் செய்வது அழகை கொடுத்தாலும் நாம் அடிக்கடி த்ரெட்டிங் செய்யும்போது இது நமது உயிரை மாய்க்க கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் புருவ முடிகள் வர்ம இடங்களில் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருப்பதால் இவை வர்ம இடங்களை பலவீனப்படுத்தி காலப்போக்கில் பெண்களுக்கு குணமாக்க முடியாத பல நோய்களை கொடுத்துவிடுகிறது.

வர்ம இடங்கள் பாதிக்கப்படுவதால் பிராண சக்தி குறையும். இதன் காரணமாக குறைந்த ஆயுள் கொண்டவர்களாக திரெட்டிங் செய்யும் பெண்கள் மாறுவதுடன் அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளும் அதேபோல குறைந்த ஆயுள் கொண்டவர்களாக மாறுகின்றனர். காலப்போக்கில் ஆரோக்கியம் குறைவான சமுதாயத்தை உருவாக்கி விட்டு நம்முள் இருக்கக்கூடிய மின்காந்த சக்தியை சிதைத்துவிட்டு நாம் செல்கிறோம்.

திரெட்டிங் செய்வதில் என்னடா இருக்கிறது என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நமது உடலின் முக்கிய சக்தி இந்த கண்களுக்கு நடுவில் தான் ஓடுகிறதாம். அதனால் தான் ஒருவரின் மரணம் நெருங்கும் பொழுது புருவ முடிகளை தொட்டாலே அது கையோடு வந்துவிடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு நமது உயிருக்கும் புருவமுடிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே நம் நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு புருவங்களின் அழகை இயற்கையில் உள்ளபடியே ரசித்து நாம் வாழ்ந்தோமானால் நாம் நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்பதை விட ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.

author avatar
Rebekal