“10 வாரங்களில் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மதுரை கிளை நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடந்தது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை தொல்லியல் துறை ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக நடவடிக்கையை 10 வாரங்களில் தொல்லியல்துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.