அரண்மனை 4 ஆம் பாகம் தயாராகிறது-சுந்தர் சி..!

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார்.

திரைப்படங்கள் வெற்றியை பெற்றால் அதன் அடுத்த பாகங்களாக 2, 3 என்று எடுப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று தமிழில் இரண்டாம் பாகங்களாக எந்திரன் 2.0, விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சில திரைப்படங்கள் அதன் மூன்றாம் பாகங்களையும் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோன்று சிங்கம், காஞ்சனா ஆகியவை திரைக்கு வாந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்றுள்ளது.

இதனால் ஆர்யா, ராசிக்கன்னா நடிப்பில் அரண்மனை 3 ஆம் பாகம் தயாராகி வரும் நிலையில், இந்த திரைப்படம் திரைக்கு வந்த பிறகு அரண்மனையின் 4 ஆம் பாகம் எடுக்க உள்ளதாக சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நான்காம் பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.