மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- முதல்வர்..!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் வருகின்ற 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தற்போது அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,  அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

author avatar
murugan