NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் – பள்ளிக்கல்வித்துறை!

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல் கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பட்டியலிடப்பட்டுள்ள நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் எனும் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளில் பயிலக்கூடிய முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த பதிவேற்றும் பணியை நிறைவு செய்யவேண்டும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal